அவலுார்பேட்டை மேல்மலையனுார் கோவிலில் ரூ.32 லட்சம் உண்டியல் வசூல்
ADDED :2147 days ago
அவலுார்பேட்டை : மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ரூ.32 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் உண்டியல் பணம் வசூல் ஆனது.மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் கார்த்தி கை மாத அமாவாசை முடிந்து பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்த உண்டியல்கள் திறக்கப்பட்டன.
இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையாளர்கள் ராமு, ஜோதி ஆகியோர் முன்னிலையில் கோவில் வளாகத்தில் பணம் எண்ணும் பணி நடந்தது. இதில், ரூ.32 லட்சத்து 58 ஆயிரத்து 326 ரூபாய் பணமும், தங்கநகைகள் 178கிராம் மற்றும் வெள்ளி பொருட்கள் 510 கிராம் ஆகியவை பக்தர்கள் உண்டியல்களில் காணிக்கைகயாக செலுத்தியிருந்தனர். இதில் அறங்காவலர்கள் செல்வம், ஏழுமலை, ரமேஷ், கணேசன், சரவணன், மணி, சேகர் ,ஆய்வாளர் அன்பழகன் கலந்து கொண்டனர்.