இணைந்த இரு விஷங்கள்
ADDED :2454 days ago
தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகி பாம்பு வலி பொறுக்க முடியாமல் விஷத்தை கக்கியது. அப்போது பாற்கடலில் இருந்தும் விஷம் வெளிப்படவே, இரண்டும் ஒன்று சேர்ந்தன. "ஆலம் என்பதற்கு விஷம் என பொருள். இரு விஷங்கள் இணைந்தால் அதனை "ஆலாலம் என்பர். அதுவே "ஆலகாலம் என மருவியது.