தேவகோட்டை சபரி சாஸ்தா பஜனைக்குழு சார்பில் சிறப்பு பூஜை
ADDED :2426 days ago
தேவகோட்டை : தேவகோட்டை கருதாவூரணி குருபூஜை மடத்தில் சபரி சாஸ்தா பஜனைக்குழு சார்பில் 50 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடந்தன.தினந்தோறும் வெவ்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு கயிலை பொன்ராஜ் தலைமையில் கூட்டு வழிபாடு நடந்தது. நேற்று 31ம் தேதி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.