தஞ்சை பெரிய கோவிலில் 362 கிலோ மணி பொருத்தப்பட்டது
தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவிலில், 362 கிலோ புதிய மணி, நேற்று பொருத்தப்பட்டது. தஞ்சாவூர் பெரிய கோவிலில், மூலவர் பெருவுடையார் சன்னிதிக்கு செல்லும் நுழைவு வாயில் முன், 100 ஆண்டுகள் பழமையான மணி இருந்தது.
இந்த மணி பழுதடைந்ததால், புதிய மணி பொருத்த திட்டமிடப்பட்டது. தஞ்சாவூரைச் சேர்ந்த பத்மநாபன் குடும்பத்தினர்,2 லட்சம் ரூபாய் மதிப்பில்,தஞ்சாவூர் மாவட்டம், நாச்சியார்கோவில் அடுத்த நான்காம்கட்டளை கிராமத்தில், 362 கிலோ, 3.5 அடி உயரத்தில், செம்பு, காரீயம், வெண்கலம் கலந்து வடிவமைக்கப்பட்ட புதிய மணியை கோவிலுக்கு வழங்கினர்.சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, நேற்று புதிய மணி பொருத்தப்பட்டது. பாலாலயம்இரண்டாம் சரபோஜி மன்னரால், 1814ம் ஆண்டு, 28 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட கொடி மரம் பழுதடைந்ததால், 2003ல், புதிய கொடி மரம் தயாரிக்கப்பட்டு, செப்புத் தகடு பொருத்தி, பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிப். 5ல், கும்பாபிஷேகம் நடக்க உள்ளதால், கொடிமரம், திருப்பணிக்காக பாலாலயம் நடந்தது.அஷ்டபந்தன மருந்து கோவிலில் உள்ள பெருவுடையார் மற்றும் 12 விநாயகர் சிலைகள், எட்டு முருகன் சிலைகள், 252 சிவலிங்க திருமேணிகள் உட்பட, 338 சிலைகளுக்கு, அஷ்டபந்தன மருந்து சாத்தும் நிகழ்ச்சி, நேற்று துவங்கியது.