உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயிலில் கலசம் திருட்டு

ராமேஸ்வரம் கோயிலில் கலசம் திருட்டு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் தனுஷ்கோடி அருகே கோதண்டராமர் கோயில் கோபுர கலசம் திருடப்பட்டது. ராமரை விபீஷணர் சந்தித்த இடம் தனுஷ்கோடி. தனுஷ்கோடி அருகே கோதண்டராமர் கோயில் உள்ளது.

பழமையான இக்கோயில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. 1964 தனுஷ்கோடி புயலில் இக்கோயில் சேதமடைந்ததும், புதிய கோயில் கட்டி 1978ல் கும்பாபிேஷகம் நடந்தது. 28 ஆண்டுகளுக்கு பின் 2006 ல் கும்பாபிேஷகம் நடந்தது. கோயில் கோபுரத்தில் 2 அடி உயரத்தில் ஒரு கலசம் இருந்தது. கலசத்தை நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். கோயிலுக்கு மின் இணைப்பு இல்லை. இரு காவலர்கள் பணியில் இருந்தும், கோயில் முன்புள்ள தகர செட் வழியாக மர்ம நபர்கள் ஏறி  கலசத்தை திருடியுள்ளனர். கோயில் பேஷ்கார் அண்ணாதுரை தனுஷ்கோடி போலீசில் புகார் அளித்தார். 3 மாதங்களுக்கு முன்பு இக்கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது. அதன்பின்னரும் கோயிலில் பாதுகாப்பை அறநிலையத்துறை அதிகாரிகள் பலப்படுத்தாததால் மீண்டும் திருட்டு நடந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !