பழிக்குப்பழி வேண்டாம்!
ADDED :2433 days ago
ஒருமுறை வான தூதரான மூஸா, ""என் அதிபதியே!
உன் அடியார்களில் உன் அன்பிற்குரியவர் யார்?” எனக் கேட்டார். அதற்கு
அளித்த பதில் அனைவருக்கும் ஏற்புடையது.
""பழி வாங்கும் சக்தி இருந்தும்
பிறரை யார் ஒருவர் மன்னிக்கிறாரோ, அவரே நேசத்திற்கு உரியவர்” என்றார்.
ஒருவர் தீமையே செய்தாலும் பழிவாங்கும் எண்ணம் கூடாது. மாறாக அவரிடம் அன்பு
செலுத்த வேண்டும்.