உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு

சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு

வத்திராயிருப்பு : சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மார்கழி பிரதோஷ வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு நேற்று காலை 6:00 மணிக்கு தாணிப்பாறையில் குவிந்த பக்தர்கள் வனத்துறையினரின் சோதனைக்கு பிறகு மலையேற துவங்கினர். சுந்தரமகாலிங்கம் கோயிலில் நடந்த வழிபாட்டில் 500க்கு மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் விஸ்வநாதன், அலுவலர்கள் செய்திருந்தனர். ஜன.11 வரை பக்தர்கள் அனுமதிக்கபடுகிறார்கள்.
 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !