அஸ்வத்தா – அர்த்தம் தெரியுமா
ADDED :2111 days ago
அரசமரம் மகாவிஷ்ணுவின் வலது கண்ணில் இருந்து தோன்றியது. இந்த மரத்தை வெட்டுவது, அதன் மீதேறுவது போன்ற தகாத செயல்களால் துர்மரணம், வறுமை ஏற்படும். அரசமரத்துக்கு ‘அஸ்வத்தா’ என்றும் பெயர் உண்டு. ‘வழிபடுபவர்களின் பாவத்தை மறுநாளே தீர்ப்பது’ என்பது பொருள். பாண்டவர், கவுரவர்களின் குருவான துரோணாச்சாரியார் தன் மகனுக்கு ‘அஸ்வத்தாமன்’ என்றே பெயரிட்டார்.