உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கால பைரவருக்கு வளர்பிறை அஷ்டமி பூஜை

கால பைரவருக்கு வளர்பிறை அஷ்டமி பூஜை

ஊத்துக்கோட்டை:எல்லாபுரம் ஒன்றியம், தொம்பரம்பேடு கிராமத்தில் உள்ள மஹா கால பைரவர் கோவிலில், நேற்று, காலை, 11:00 மணிக்கு, வளர்பிறை அஷ்டமி விழா நடந்தது.மூலவருக்கு பால், தயிர், மஞ்சள், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.பின், மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்து மஹா தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !