துர்க்கை பரமேஸ்வரி கோயிலில் வருஷாபிஷேகம்
ADDED :2410 days ago
சிவகாசி: சிவகாசி பஸ் ஸ்டாண்டு அருகில் உள்ள ஸ்ரீ துர்க்கை பரமேஸ்வரி கோயிலில் வருஷாபிஷேகம் மற்றும் பால்குடம் திருவிழா நடந்தது. காலையில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். அன்னதானமும் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.