உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீதாலட்சுமி ஞானாலயம் கும்பாபிஷேகம்

சீதாலட்சுமி ஞானாலயம் கும்பாபிஷேகம்

சோழவந்தான்: சோழவந்தான் ஆர்.எம்.எஸ்.,காலனி சீதாலட்சுமி ஞானாலயம் கும்பாபிஷேகம் நடந்தது. ஓதுவார்கள் சந்திரசேகர், சண்முகநாதன் தேவாரம், திருவாசகம் பாட சிவாச்சார்யார் தட்சிணாமூர்த்தி கோபுர கலசத்தில் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினார். அன்னை சீதாலட்சுமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகளை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கபட்டது.  ஏற்பாடுகளை ராதானந்தம் அறக்கட்டளையினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !