உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) குடும்பத்தில் மகிழ்ச்சி

மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) குடும்பத்தில் மகிழ்ச்சி

மனதில் பட்டதை வெளிப்படுத்தும் மகர ராசி நேயர்களே!


சுக்கிரன், ராகு மாதம் முழுவதும் நற்பலனைக் கொடுப்பர். ராகு முயற்சிகளில் வெற்றியைத் தருவார். பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். ஆற்றல் மேம்படும். சுக்கிரனால் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். கணவன், மனைவி இடையே அன்பு, பாசம் மேலோங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிப்.29க்கு பிறகு சமூக மதிப்பு அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். புதிய உறவினரால் உதவி கிடைக்கும். சூரியனால் ஏற்பட்ட அலைச்சல், சோர்வு, முதலியன மறையும்.

பெண்களுக்கு மார்ச் 11க்கு பிறகு செல்வாக்கு அதிகரிக்கும். கணவர் மற்றும் குடும்பத்தினரின் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். கணவரின் அன்பும், ஆதரவும் கண்டு மகிழ்வர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவரும் உங்களின் மேன்மை அறிந்து சரணடையும் நிலை வம். சுபநிகழ்ச்சிகள் கைகூடும். வேலைக்கு செல்லும் பெண்கள் பணிச்சுமையைச் சந்திப்பர். வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை.உடல் நலனில் அக்கறை தேவை. செவ்வாயால் பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் ஏற்படலாம்.

சிறப்பான பலன்கள்
* தனியார் துறையில் பணிபுரிபவர்கள் சுக்கிரனால் சம்பள உயர்வு கிடைக்கப் பெறுவர். சிலருக்கு புதிய பதவி கிடைக்கும்.
* அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி கிடைக்கப் பெறுவர். பணப்புழக்கத்திற்கு குறை இருக்காது.
* கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்கும்.
* விவசாயிகளுக்கு உழைப்புக்கு தகுந்த வருமானம் கிடைக்கும். உளுந்து, எள், கிழங்கு வகைகளில் அதிக மகசூல் கிடைக்கும்.  புதிய தொழில் நுட்பத்தால் பணியை விரைந்து முடிப்பீர்கள். நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்புண்டு.

சுமாரான பலன்கள்

* தொழிலதிபர்கள் அதிகமாக உழைத்தால் முன்னேற்றம் காணலாம். போதிய வருமானம் கிடைக்கும். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை வரலாம்.
* வியாபாரிகளுக்கு பொருள் களவு ஏற்பட வாய்ப்புண்டு. போட்டியாளர் வகையில் தொல்லை குறுக்கிடும். வாடிக்கையாளரை விடாமுயற்சியால் தக்க வைப்பீர்கள்.  
* தரகு, கமிஷன் தொழில் செய்வோர் குடும்ப விஷயத்தை பகிர வேண்டாம். பணப்புழக்கம் சீராக இருக்கும்
* ஐ.டி., துறையினருக்கு புதனால் செல்வாக்கு பாதிப்பு ஏற்படலாம். சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடு, வீண் கவலை வரலாம்.
* மருத்துவர்கள் வேலையில் அக்கறையுடன் இருக்கவும். முக்கிய பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்யவும். பொறுமை, விடாமுயற்சி தேவை.  
* வக்கீல்கள் வழக்கு, விவகாரத்தில் குழப்பத்திற்கு ஆளாகலாம். மனதில் இனம் புரியாத வேதனை குடி கொண்டிருக்கும்.
* ஆசிரியர்களுக்கு விரயச் செலவு, வீண் பிரச்னை உருவாகும். சக ஊழியர்களால் பணிச்சுமை அதிகரிக்கும்.  
* அரசு பணியாளர்கள் கவனமுடன் இருக்கவும். அதே நேரம் உழைப்புக்கு ஏற்ற பலன் எதிர்காலத்தில் கிடைக்கும். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.
* போலீஸ், ராணுவத்தினர் பணிபளுவால் உடல்நலக்குறைவைச் சந்திப்பர். சக ஊழியர்களிடம் அனுசரித்து போகவும்.
* அரசியல்வாதிகளுக்கு போதிய வருமானம் இருந்தாலும் எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைப்பது அரிது
* விவசாயிகளுக்கு புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும். வழக்கு, விவகாரங்களில் முடிவு சுமாராக இருக்கும்.
கால்நடை வகையில் எதிர்பார்த்த பலனை பெற இயலாது.
* பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு புதன் சாதகமற்று இருப்பதால் விடாமுயற்சி தேவைப்படும்.  

 நல்ல நாள்: பிப்.14,15,16,17,21,22,26,27, மார்ச் 4,5,6,7,12,13
 கவன நாள்: மார்ச் 8,9 சந்திராஷ்டமம்
 அதிர்ஷ்ட எண்: 4,8  நிறம்: வெள்ளை, நீலம்

பரிகாரம்:
* சனிக்கிழமையில் பெருமாளுக்கு அர்ச்சனை
* வியாழனன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு
* பிரதோஷத்தன்று நந்தீஸ்வரர் தரிசனம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !