கோட்டை மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா
ADDED :2168 days ago
திண்டுக்கல், திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் அலங்கார ரத ஊர்வலம் நடந்தது.
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா பூத்த மலர் பூ அலங்காரத்துடன் நேற்று முன்தினம் (பிப்.20) துவங்கியது. நேற்று காலை 9:00 மணிக்கு பூச்சொரிதல் விழாவும், அம்மன் திருத்தேரில் நகர் பகுதியில் வீதியுலாவும் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அம்மன் பூச்சொரிதல் அலங்கார ரதத்தில் வலம் வந்தார். ஏராளமான பக்தர்கள் மலர்களை சுவாமி மீது வீசி வழிபட்டனர்.