ஆற்காட்டு அம்மன் கோவிலில் ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்
ADDED :21 hours ago
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி ஆற்காட்டு அம்மன் கோவிலில் ஆடி அமாவாசை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஆடிஅமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து மலர்களால் அலங்கரித்து ஊஞ்சல் உற்சவம் நடந்து அம்மனுக்கு மகாதீப ஆராதனை நடந்தது. அபிஷேகம் மற்றும் பூஜைகளை முருகன் பூசாரி முன்னின்று செய்தார். விக்கிரவாண்டி பகுதி பொதுமக்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.