துன்பத்தில் மனம் சஞ்சலப்படும் போது எப்படி மனதை தேற்றுவது?
ADDED :2150 days ago
இன்பத்தில் மகிழ்வது, துன்பத்தில் துவள்வது மனதின் இயல்பு. கவலைப்படுவதால் துன்பம் தீவிரமடையுமே ஒழிய தீர்வு கிடைக்காது. ‘நமக்கும் கீழே உள்ளவர் கோடி’ என்ற உண்மையை உணருங்கள். தன்னம்பிக்கை மிக்கவர்களோடு பழகவும், நல்ல நுால்களைப் படிக்கவும் செய்யுங்கள். திங்கட்கிழமை, பவுர்ணமியன்று கோயில் வழிபாடு செய்தால் மனோபலம் அதிகரிக்கும்.