பைரவர் கோவிலில் திரியம்பகாஷ்டமி வழிபாடு
ADDED :2037 days ago
தலைவாசல்: தலைவாசல் அருகே, தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, பைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. தலைவாசல், ஆறகளூரில் பிரசித்தி பெற்ற காமநாதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. பங்குனி மாத தேய்பிறை அஷ்டமி, திரியம்பகாஷ்டமி என கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நேற்று அதிகாலை பால், தயிர், நெய் உள்ளிட்டவற்றால், மூலவர் காமநாதீஸ்வரருக்கு சிறப்பு அபி?ஷகம் செய்யப்பட்டது. ஐந்து வகை எண்ணெய்களால், பக்தர்கள் தீபம் ஏற்றி பைரவரை வழிபட்டனர். அஷ்ட பைரவர்களுக்கும், தனித்தனியாக சிறப்பு வழிபாடுகள் நடந்தன. காமநாதீஸ்வரர், பெரியநாயகி அம்மன் ஆகியோர், சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். மதியம் அஷ்டபுஜ காலபைரவர் சன்னதியில், சிறப்பு யாகம் நடந்தது. இதையடுத்து நடந்த தீபாராதனையில், பக்தர்கள் பைரவர் அருள் பெற்றனர்.