லாபமோ லாபம் யாருக்கு
* பக்தி செலுத்துவதால் கடவுளுக்கு எந்த லாபமும் இல்லை; நமக்கு தான் பெரிய லாபம்
* பணத்தாசை இல்லாமல் நல்லதை செய்தாலே மனதில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.
* வாழ்க்கைத்தரம் என்பது பொருள் சார்ந்தது அல்ல. அவரவர் மனதைப் பொறுத்தது.
* நாம் எந்த இடத்தில் இருந்தாலும் அங்கு மகிழ்ச்சியை உண்டாக்க வேண்டும்.
* மனக் கட்டுப்பாடு ஒன்றே மனதில் உள்ள அசுத்தங்களைப் போக்கும்.
* பேராசை கொண்டவர் யாரும் கடவுளின் அருளை பெற முடியாது.
* ஆடம்பரக் கல்யாணமும் வரதட்சிணைப் பழக்கமும் ஒழிக்கப்பட வேண்டும்.
* மனம் எதை இடைவிடாமல் நினைக்கிறதோ அதை அடைந்தே தீரும்.
* பழைய பாவத்தை கழிப்பதைவிட புதிய பாவங்களைச் செய்யாமல் இருப்பது நல்லது.
* தினமும் அரை மணி நேரமாவது தியானம் செய்தால் மனம் தெளிவு பெறும்.
* வீடு அழுக்கு இல்லாமல் இருந்தால் போதாது; மனம் துாய்மையானதாக இருக்க வேண்டும்.
* குடி கூடாது; அது புத்தியை, குடும்பத்தை கெடுத்து பேராபத்தில் தள்ளி விடும்.
* பிறர் மீது அன்பு செலுத்துவது மட்டுமே மனிதப்பிறவி எடுத்ததின் நோக்கம்.
* நாம் ஒவ்வொருவரும் தினமும் பசுவுக்கு ஒரு பிடி புல்லாவது கொடுக்க வேண்டும்.
* ஒரு மனிதனை முழுமையாக திருப்திபடுத்துவது அன்னதானம் ஒன்றே.
* எப்போதும் புன்னகை, சாந்த முகம் கொண்டவர் வாழ்வில் குறையேதும் இருக்காது.
* காலையில் நாராயணர், மாலையில் மகேஸ்வரரை நினைத்து தியானம் செய்ய வேண்டும்.
* ருசிக்காக சாப்பிடாமல் பசிக்காக சாப்பிடுவது மிகுந்த நன்மை தரும்.
சொல்கிறார் காஞ்சிப்பெரியவர்