குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழா
ADDED :1 days ago
குன்றத்துார்: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு இன்று குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சந்தன அலங்காரத்தில் முருகன் வள்ளி தெய்வானையுடன் அருள்பாலித்தார்.
குன்றத்துார் மலை மீது பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. தமிழகத்தில் வடக்கு நோக்கி அமைந்துள்ள முருகன் கோவில் என்ற சிறப்பை இக்கோவில் பெற்றுள்ளது. இங்கு பங்குனி உத்திரம் விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே பக்தர்கள் திரண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மூலவர் மற்றும் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கோவில் கொடி மரம் முன் 110 கிலோ சந்தனத்தால் அலங்கரிக்கப்பட்ட வள்ளி, தெய்வானையுடன் காட்சியளித்த முருகனை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.