பெரியகுளம் லெட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்
ADDED :1 days ago
பெரியகுளம்: பெரியகுளம் அருகே லெட்சுமிபுரம் கம்மவார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட லெட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் நூற்றாண்டு பழமையானது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு லெட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கல்யாணம் கோலகாலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராமநல கமிட்டி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.