உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீழக்கரை அருகே தட்டார் மடத்தில் விநாயகர், சுப்ரமணிய சுவாமி தேர் பவனி

கீழக்கரை அருகே தட்டார் மடத்தில் விநாயகர், சுப்ரமணிய சுவாமி தேர் பவனி

கீழக்கரை: பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு கீழக்கரை உக்கிர வீரமாகாளியம்மன் கோயிலில் இருந்து. மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் மற்றும் சுப்பிரமணிய சுவாமி தேர் பவனி நடந்தது. உற்ஸவமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலர் அலங்காரத்துடன் தீபாராதனைகள் நடந்தது. நேற்று இரவு 7:00 மணிக்கு மேளதாளங்கள் முழங்க 3 கி.மீ., தொலைவில் உள்ள தில்லையேந்தல் தட்டார் மடம் சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு புறப்பட்டு சென்றது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தங்கம், வெள்ளி தொழிலாளர் சங்கம் மற்றும் விழா கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !