உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா :பம்பையில் ஆராட்டுடன் நிறைவு

சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா :பம்பையில் ஆராட்டுடன் நிறைவு

சபரிமலை: சபரிமலையில் 10 நாட்கள் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழா இன்று ஆராட்டுடன் நிறைவு பெற்றது.


பங்குனி உத்திர திருவிழா கடந்த மாதம் 23-ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் உற்சவபலி, ஸ்ரீ பூதபலி போன்ற நிகழ்ச்சிகளுடன் விழா நடைபெற்றது. 9-ம் நாள் விழாவில் இரவு அத்தாழ பூஜைக்கு பின்னர் சுவாமி பள்ளி வேட்டைக்காக சரங்குத்திக்கு எழுந்தருளினார். நள்ளிரவில் சுவாமி சன்னிதானம் திரும்பினார். இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் சுவாமியை ஶ்ரீகோயிலுக்குள் ஆவாகிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் பூஜைகள் நடைபெற்றது 8:00 மணிக்கு ஆராட்டுப்பவனி பம்பைக்கு புறப்பட்டது. 11.45 மணிக்கு பம்பை நதியில் பாராட்டு . ஆராட்டு விக்ரகத்துக்கு குளக்கரையில் பால், பன்னீர், மஞ்சள், சந்தனம், குங்குமம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்த பின்னர் விக்ரகத்துடன் பூஜாரிகள் தண்ணீரில் மூழ்கி எழுந்தனர். அப்போது பக்தர்கள் சரண கோஷம் முழக்கினர். மாலை 3:00 மணிக்கு ஆராட்டு பவனி சன்னிதானத்திற்கு புறப்பட்டது. இரவு 8:30 மணிக்கு சன்னிதானம் வந்ததும் திருக்கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !