உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் கோலாகலம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் கோலாகலம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.


பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில், உண்ணாமுலையம்மன் சமேதராய் அண்ணாமலையார் மற்றும் பராசக்தியம்மன் எழுந்தருளினர். தொடர்ந்து திருக்கல்யாண வைபவம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில்  உண்ணாமுலையம்மன் சமேதராய் அண்ணாமலையார் மற்றும் பராசக்தியம்மன்  ரிஷப வாகனத்தில் எழுந்தருளி மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !