உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கர லிங்கம் சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு

சங்கர லிங்கம் சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு

மதுரை: உலகையே அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து விடுபட சங்கர லிங்கம் சுவாமிக்கு, சிறப்பு அர்ச்சனை வழிபாடு நடைபெற்றது.

இன்று  வெள்ளிக்கிழமை அதிகாலை சங்கர லிங்கம்  சுவாமிக்கு, சிறப்பு அர்ச்சனை வழிபாடு  நடைபெற்றது. மதுரை மாவட்டம்,  மேலூர் தாலுகா,  தும்பைப்பட்டி,  சிவாலயபுரத்தில் அருள்பாலிக்கும் சங்கர லிங்கம் சுவாமி, கோமதி அம்மன்,  சங்கரநாராயணர் கோவிலில், உலகையே அச்சுருத்தி,  ஆட்டிப் படைக்கும் இந்தக் கொடூரத் தொற்று நோயிலிருந்து விடுபட்டு,  மக்கள் அனைவருக்கும் சுகவாழ்வு வாழவும், நாட்டில் நிலவும் அச்சம்  நீங்கவும்,   மக்கள் பெருங் குழப்பத்திலிருந்து விடுபட்டு நலம் பெற வேண்டி   சிறப்பு  அர்ச்சனை,  வழிபாடு நடைபெற்றது. நாட்டில்  மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும்,  விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.  பக்தர்கள், சினடியார்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.  சுவாமி விபூதி சர்வ  அலங்காரத்தில்  அருள் பாலித்தார். ரமேஷ் அய்யர், சங்கர நாராயணர் கல்வி, அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் வழிபாடு ஏற்பாடு  செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !