பெருமாள் கோயிலில் தீர்த்த பிரசாதம் தருவதன் நோக்கம் என்ன?
ADDED :2322 days ago
எந்தக் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தாலும் அந்த சுவாமிக்குரிய பிரசாதத்தை வழங்குவது மரபு. இதன் மூலம் இறையருளுககுப் பாத்திரமாகிறோம். சிவன் சன்னதியில் விபூதியும், அம்பாள் சன்னதியில் குங்குமமும், பெருமாள் சன்னதியில் தீர்த்தம், துளசி பிரசாதமும் வழங்குவர். இத்துளசியும், தீர்த்தமும் உடல் ஆரோக்கியத்தை நல்கும் அருமருந்தாக இருப்பதோடு செல்வவளத்தையும், முகப்பொலிவையும் நமக்குத் தருகின்றன.