சம்பந்தரின் கோளறு பதிகம் பாடுவதால் கிடைக்கும் பலன் என்ன?
ADDED :2319 days ago
கோளறு பதிகம் என்றால் நவக்கிரகங்களின் கெடுதல்களை நீக்கும் பத்து பாடல்கள் என்பது பொருளாகும். இதனைப் பாடி சிவபெருமானை வழிபட்டால் நவகிரக தோஷம் நீங்கும். தீயசக்திகள் நம்மை அண்டாது. நாம் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். ஞானசம்பந்தரின் இப்பதிகம் பாடி சிவபெருமானை வணங்குபவர்கள் சொர்க்கலோகத்தில் அரசபதவி பெறுவர் என்பதை, ""தான்உறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய் ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே! என்று பாடியுள்ளார்.