உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இது மிகவும் பிடிக்கும்

இது மிகவும் பிடிக்கும்

ஒருமுறை பாற்கடலுக்கு வந்த நாரதர் ‘‘தாயே! மகாலட்சுமி! எங்கெல்லாம் விருப்பமுடன் வீற்றிருப்பீர்கள்?’ எனக் கேட்டார்,  “தினமும் விளக்கேற்றும் வீடு, துளசிமாடம், சங்கு, சாளக்கிராமம், தாமரை, தானியக்குவியல், தானம் செய்யும் இடம், பசுக்கொட்டில், தயாள குணம் கொண்டவர், இனிமையாகப் பேசுபவர், சுறுசுறுப்பு மிக்கவர், தற்பெருமை இல்லாதவர், சத்திய வழி நடப்பவர், எண்ணம், சொல், செயல் மூன்றாலும் துாய்மை காப்பவர், சாப்பிடும் போது ஈரக்காலுடன் அமர்பவர், ஈரக்காலை துடைத்துவிட்டு துாங்கச் செல்பவர், கூந்தலை பின்னி முடித்த பெண்கள் இருக்கும் இடங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அங்கெல்லாம் நிரந்தரமாக வசிப்பேன்’’ என்றாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !