உலகின் முதல் சிவலிங்கம்!
ADDED :2055 days ago
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் பாபநாசநாதர் கோயிலில் உள்ள மூலவர் ருத்ராட்சத்தினால் ஆனவர். பொதிகை மலை அடிவாரத்தில் உள்ள இந்தக் கோயிலின் மூலவரே உலகின் முதல் சிவலிங்கம் என தலபுராணம் கூறுகிறது. இமயத்தில் சிவன் பார்வதிக்கு நடந்த திருமணத்தை பொதிகை மலையில் அகத்தியர் கண்டார். அந்த நிகழ்ச்சி இங்கு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.