செல்வ காமாட்சியம்மன் கோயிலில் வருடாபிஷேக விழா
ADDED :1940 days ago
கடலாடி: கடலாடியில் உள்ள செல்வ காமாட்சியம்மன் கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது. மூலவர் அம்மன், பரிவார தெய்வங்களுக்கு18 வகையான அபிஷேக ஆராதனை நடந்தது. பக்தர்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர். உலக நன்மைக்கான வழிபாடும் நடந்தது.