பெரியாண்டவர் கோவில் குடமுழுக்கு
ADDED :2200 days ago
வடலுார்: வடலுார் பார்வதிபுரம் பெரியாண்டவர் கோவிலில் குடமுழுக்கு நடந்தது. வடலுார், பார்வதிபுரம் பாப்பான்குளம் கிராமத்தில் பழமையா பெரியாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவில் புணரமைக்கப்பட்டு குடமுழுக்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி நேற்று காலை சிறப்பு பூஜைகளை தொடர்ந்து, குடமுழுக்கு நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஜெ யவிஜயன், ராதா கிருஷ்ணன் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.