லட்சார்ச்சனை என்றால் என்ன?
ADDED :2058 days ago
கடவுளின் திருநாமத்தை நுாற்றெட்டு முறை சொல்வது அஷ்டோத்திரம். ஆயிரம் முறை சொல்லிச் செய்வது சகஸ்ரநாமம். சகஸ்ர நாமத்தை நுாறுமுறை சொன்னால் லட்சம் கணக்கு வரும். இதுவே ‘லட்சார்ச்சனை’ எனப்படும். ஆயிரம், லட்சம், கோடி என்ற கணக்கில் நாமங்களைச் சொல்லி அர்ச்சனை செய்தால் உலகத்திற்கே நன்மை உண்டாகும்.