காரமடை அரங்கநாதர் கோவிலில் ஏகாதசி பூஜை
ADDED :1886 days ago
காரமடை : சார்வரி வருஷ, ஆடி மாத கிருஷ்ண பட்ஷ சர்வ ஏகாதசியை முன்னிட்டு, காரமடை அரங்கநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத ரங்கநாதர் நீல பட்டு உடுத்தி மூவர்ண மாலையுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.