உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிள்ளையார்பட்டி சதுர்த்தி விழா நிறைவு: பஞ்சமூர்த்திகளுக்கு தீபாராதனை

பிள்ளையார்பட்டி சதுர்த்தி விழா நிறைவு: பஞ்சமூர்த்திகளுக்கு தீபாராதனை

 பிள்ளையார்பட்டி; பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா நிறைவு நாளை முன்னிட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.இங்கு 10 நாட்கள் சதுர்த்தி விழா நடக்கும். ஆக.,13ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. சுவாமி புறப்பாடு, தேரோட்டம், கஜமுக சூரசம்ஹாரம், சந்தனகாப்பு அலங்காரம் நிகழ்வுகள் ஊரடங்கால் நடைபெறவில்லை. பக்தர்களை அனுமதிக்காமல் ஆகம விதிப்படி பூஜைகள் நடந்தது. நேற்று விநாயகர் சதுர்த்தியையொட்டி தங்க கவசத்தில் மூலவர் அருள்பாலித்தார்.காலை அஸ்திரத்தேவர் மற்றும் அங்குச தேவர் கோயிலில் இருந்து தெப்பக்குளம் புறப்பட்டனர். உற்ஸவ விநாயகர், சண்டிகேஸ்வரர் எழுந்தருளினர். ஸ்ரீதர் சிவாச்சாரியார் உள்ளிட்டோர் வேதமந்திரங்கள் முழங்க, தலைமை சிவாச்சாரியார் பிச்சை குருக்கள் சிறப்பு அபிேஷகம் செய்தார். சோமசுந்தர குருக்கள் தீர்த்தவாரி உற்ஸவம் நடத்தினார். பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கோயிலுக்கு வெளியே நின்று சாமி தரிசனம் செய்தனர். மதியம் முக்குறுணி மோதகம் படையல் செய்தனர். இரவு ஐம்பெரும் சுவாமிகள் எழுந்தருளினர். pillaiyarpatti temple official யூ-டியூப் சேனலில் ஒளிபரப்பப்பட்டது. சதுர்த்தி விழா நிறைவு நாளை முன்னிட்டு இன்று பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.சதுர்த்தியில் சிறப்பு பெற்ற மூலவர் சந்தனக்காப்பு அலங்காரம் ஊரடங்கிற்கு பின் நடக்கும் என அறங்காவலர்கள் காரைக்குடி மெய்யப்பன் செட்டியார், குருவிக்கொண்டான்பட்டி பழனியப்பன் (எ) செந்தில் செட்டியார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !