உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு நந்திகேஸ்வர பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு, நேற்று காலை 9:00 மணிக்கு, பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடந்தது. மாலை 4:00 மணிக்கு, மூலவர் வீரட்டானேஸ்வரர்க்கு மகா அபிஷேகம், அலங்காரம், 5:30 மணிக்கு, நந்திகேஸ்வரருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம், அலங்காரம் நடந்தது. 6:00 மணிக்கு ஓம் நமச்சிவாயா கோஷம் முழங்க வீரட்டானேஸ்வரர், நந்திகேஸ்வரர் பெருமானுக்கு ஒருசேர சோடசோபவுபச்சார தீபாராதனை நடந்தது. பிரதோஷ நாயகர்களுக்கு தீபாராதனை, ஸ்ரீ ருத்ரம், திருவாசகம் முழங்க ஆலயம் வலம் வந்தது. பக்தர்கள் இன்றி தனிமனித இடைவெளியுடன் சிவாச்சாரியார்கள் மட்டுமே விழாவில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !