சமூக இடைவெளியுடன் தொழுகை
ADDED :1892 days ago
பந்தலூர்: கொரோனா தொற்று ஏற்ப்பட்டதையடுத்து வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டது. இதனால் கோவில், தேவாலயம், பள்ளிவாசல்களில் பக்தர்கள் வருகை நிறுத்தப்பட்டது. தற்போது இவற்றிற்கு விலக்கு அளிக்கப்பட்ட நிலையில், 4-மாதங்களுக்கு பின்னர் நேற்று பள்ளிவாசல்களில் தொழுகை நடத்தப்பட்டது. பந்தலூர் பள்ளிவாசலுக்கு வந்தவர்களுக்கு சானிடைசர் வழங்கி அனுமதிதாதனர். மேலும் சமூக இடைவெளியுடன் அமர்ந்து தொழுகை நடத்தினார்கள். நீண்ட இடைவெளிக்கு பின்னர் தொழுகை நடத்தியது மனநிறைவை தருவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.