சிவகாளியம்மன் கோயிலில் வருடாபிஷேக விழா
ADDED :1901 days ago
உத்தரகோசமங்கை : வைகை கிராமம் புத்தாளக்கண்மாய் கரையோரத்தில் உள்ள சிவகாளியம்மன் கோயிலில் 2019ல் கும்பாபிஷேகம் நடந்தது. முதல் வருட நிறைவை முன்னிட்டுவருடாபிஷேக விழாவில் மூலவர் சிவகாளியம்மன்,சப்த கன்னிமார்கள், சோனைக்கருப்பன் உள் ளிட்ட பரிவார தெய்வங் களுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. ஹோம வேள்வியில் உலக நன்மைக்கான சிறப்பு பூஜை நடந்தது.