30000 பவுன் காணிக்கை
ADDED :1859 days ago
தனது ஆட்சிக்காலத்தில் ஏழுமலையான தரிசிக்க ஏழு முறை வந்தவர் விஜயநகர மன்னரான கிருஷ்ண தேவராயர். விஜய நகர ஆட்சியில் கி.பி.1509 முதல் 1529 வரை 20 ஆண்டுகள் ஆட்சி செய்தவர் இவர். ஒவ்வொரு முறையும் ஏராளமான தங்கம், நவரத்தினம், ஆபரணம் என காணிக்கை செலுத்தினார். உதயகிரி கோட்டையை கைப்பற்றிய போது, வெற்றியை
கொண்டாடும் விதத்தில் மலையப்ப சுவாமிக்கு 30,000 பவுன்களால் கனக அபிேஷகம் செய்து நன்றி தெரிவித்தார்.