புரட்டாசி பிரம்மோற்ஸவம்
ADDED :2130 days ago
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாத நவராத்திரி நாட்களில் பிரம்மோற்ஸவம் நடத்தப்படும். ஒன்பது நாளும் உற்ஸவர் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மாடவீதிகளில் எழுந்தருள்வார். இதில் ஐந்தாம் நாள் கருட சேவை, ஒன்பதாம் நாள் தேரோட்டம் முக்கியமானவை.