சுப்ரபாதம் எழுதியவர் யார்?
ADDED :1857 days ago
வெங்கடேசப் பெருமாளுக்கு தினமும் அதிகாலையில் சுப்ரபாத சேவை நடக்கும். அப்போது பிரதிவாதி பயங்கரம் அண்ணா என்பவரால் எழுதிய வெங்கடேச சுப்ரபாதம் கேட்டபடியே பெருமாள் துயில் எழுகிறார். சுப்ரபாதத்தில் வெங்கடேச ஸ்தோத்திரம், வெங்கடேச பிரபத்தி, மங்களாசாசனம் ஆகியவற்றை தாளபாக்கம் அன்னமாச்சார்யா குடும்பத்தினர் பாடுவர். அப்போது பெருமாளுக்கு பசும்பால், வெண்ணெய், சர்க்கரை கலந்த நைவேத்யம் படைத்து தீபாராதனை நடத்தப்படும். இதற்கு நவநீத ஆரத்தி என்று பெயர்.