உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பிரதோஷ வழிபாடு

இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பிரதோஷ வழிபாடு

மதுரை: மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. பிரதோஷத்தன்று மத்தியபுரி அம்மனுடன் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் நேற்று பிரதோஷம் என்பதால், நந்தியம்பெருமான், மூலவர், பிரதோஷ நாயகருக்கு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தது. நடந்த வழிபாட்டில், கண்காணிப்பாளர் கணபதி ராமன் மற்றும் கோயில் ஊழியர்கள், பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு பூஜையில் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவம், கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !