வடபழனி முருகன் கோவிலில் கிருத்திகை விழா: உற்சவருக்கு அபிஷேகம்
ADDED :1894 days ago
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு, உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
வடபழனி முருகன் கோவிலில் கிருத்திகை விழா சிறப்பாக நடைபெறும். கிருத்திகை நாளில் கோவிலில், ஏராளமான பக்தர்கள் முருகனை தரிசனம் செய்வர். இன்று கிருத்திகை விழாவை முன்னிட்டு, உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. வடபழனி முருகன் கோவிலில் அதிகாலை முதல் பக்தர்கள் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் வசதிக்காக கிருத்திகை விழா நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. தரிசனம் செய்ய லிங்கை கிளிக் செய்யவும்.
https://www.dinamalar.com/video_main.asp?news_id=2220&cat=live