பொருள் தெரிந்து படியுங்கள்!
ADDED :1925 days ago
எதையும் பொருள் விளங்கப் படித்தால் தான் பலனுண்டு. குர்ஆன் அரபிச் சொற்களால் ஆனது. அதை நாம் பொருள் விளங்கிப் படிக்க வேண்டும். நபிகள் நாயகமே இதுபற்றி, “நிச்சயமாக அல்லாஹ்வுக்கு 99 திருநாமங்கள் உள்ளன. எவர் அவைகளை உறுதியுடன் பொருள் விளங்கி ஓதி வருகின்றாரோ அவர் சொர்க்கத்தில் நுழைந்து விட்டார்,” என்று சொல்கிறார். நமது நடைமுறை வாழ்க்கைக்கும் இது பொருந்தும். மாணவர்கள் தங்கள்
பாடங்களை மனப்பாடம் செய்தால் மட்டும் போதாது. பொருள் தெரிந்து படித்தால் தான் வாழ்க்கைக்கு உதவும்.