பக்தர்கள் தலையில் தேங்காய் உடைப்பு
ADDED :1826 days ago
கன்னிவாடி : பண்ணைப்பட்டி மகாலட்சுமி அம்மன் கோயிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தும், பூஜாரியிடம் சாட்டையடி பெற்றும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விநாயகர் பூஜையுடன் துவங்கிய விழாவில் அம்மன் அழைப்பு, சிறப்பு அலங்காரம், அபிேஷக, ஆராதனைகள் நடந்தது. அமராவதி ஆற்றின் தீர்த்தம் எடுத்து வரப்பட்டு, விநாயகர் கோயிலில் இருந்து முளைப்பாரி, தீர்த்த அழைப்பு நடந்தது.விரதமிருந்த பக்தர்கள் கோயில் வளாகத்தின் முன்புறம் வரிசையாக அமர்ந்தனர். சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பூசாரி கோயிலை வலம் வந்தார். காத்திருந்த பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தும், சாட்டையடி கொடுத்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றல் நடந்தது. பின்னர், கிச்சாலம்மன், காளியம்மன் கோயிலில் பூஜை நடத்தப்பட்டு, அன்னதானம் நடந்தது.