வேண்டாமே சோம்பல்
ADDED :1840 days ago
* சோம்பலுடன் வேலை செய்ய விரும்பாதவர்கள், சாப்பிடவும் விரும்பாது இருக்கட்டும்.
* நீதிமான் தன் மரணத்திலும் நம்பிக்கையை விட மாட்டான்.
* நல்ல மரத்தில் கெட்ட கனிகளையும், கெட்ட மரத்தில் நல்ல கனிகளையும் எதிர்பார்ப்பது மூடத்தனம்.
* வாக்குவாதத்தால் கேட்பவர்களின் புத்தி தடுமாறும்.
* மண்ணால் ஆன பானை மீண்டும் மண்ணாவது போல ஆண்டவர் கொடுத்த உயிர் மீண்டும் அவரிடமே சேரும்.
* வானமும், பூமியும் அழிந்து போகும். ஆனால் சத்தியம் அழியாமல் இருக்கும்.
* மனிதனுக்காகவே ஓய்வு உண்டாக்கப்பட்டிருக்கிறதே தவிர, ஓய்விற்காக மனிதன் உண்டாக்கப்படவில்லை.
* அறிவாளிக்கு திரும்பிய பக்கமெல்லாம் ஞானம் கிடைக்கும்.
* முட்டாளுக்கு உலகம் முழுதும் தேடினாலும் ஞானம் கிடைக்காது.
* கற்புள்ள பெண்கள் கணவருக்கு கிரீடத்தைப் போன்றவர்கள்.
பைபிள்