நல்லதை தேர்ந்தெடுங்கள்
ADDED :1983 days ago
‘‘இறைவனுக்கு பயந்து செல்வத்தை நற்செயலுக்கு பயன்படுத்தினால் சொர்க்கத்திற்கு செல்லும் பாதை காட்டப்படும். கஞ்சத்தனத்தால் பிறருக்கு உதவாமல் இருந்தால் நரகத்தின் பாதை காட்டப்படும்’’ என்கிறார் நாயகம். தேவையானதை தேர்ந்தெடுக்கும் உரிமை நம்மிடம் உள்ளது. கஞ்சத்தனத்தால் வாழும் காலத்தில் வேண்டுமானால் இன்பம் கிடைக்கலாம். அது தற்காலிகமானதே. ஆனால் மறுமைநாளில் நரகத்தில் கிடந்து உழல நேரிடும். எனவே நல்லதை தேர்ந்தெடுங்கள்.