உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் ஐப்பசி அஷ்டமி பெருவிழா

மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் ஐப்பசி அஷ்டமி பெருவிழா

மயிலாடுதுறை : மயிலாடுதுறை ஆன்மீக பேரவை மயிலாடுதுறை சைவ சித்தாந்த சபை மற்றும் தமிழ்நாடு திருமூலர் திருமன்றம் சார்பில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலில் திருவாடுதுறை ஆதீனம் 24 ஆவது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆணைப்படி ஸ்ரீ கால பைரவருக்கு ஐப்பசி  மாத  வளர்பிறைஅஷ்டமி பெருவிழா நடைபெற்றது.   விழாவில் ஸ்ரீ கால பைரவருக்கு  சிறப்பு அபிஷேக ஆராதனையும் வழிபாடும்  நடைபெற்றன. விழாவில் மயூரநாதர் திருக்கோயில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி மற்றும் துணை கண்காணிப்பாளர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் டாக்டர் ராம. சேயோன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !