திருப்பரங்குன்றத்தில் அன்னாபிஷேகம்
ADDED :1805 days ago
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம், திருநகர் கோயில்களில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தன.
சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள சத்தியகிரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் முடிந்து அன்னாபிஷேகம், தீபாராதனை நடந்தது. பசுபதீஸ்வரர் கோயில், சன்னதி தெரு சொக்கநாதர் கோயில்களில் மூலவர்களுக்கு அன்னாபிஷேகம் நடந்தது. மலைக்குப்பின்புறமுள்ள பால் சுனை கண்ட சிவபெருமான், பஞ்சலிங்கத்திற்கு மூலிகை அபிஷேகங்கள், பூஜைகள் முடிந்து அன்னம் சாத்துப்படி செய்யப்பட்டது. திருநகர் சித்தி விநாயகர் கோயில், பாண்டியன் நகர் கல்யாண விநாயாகர் கோயில்களில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்குஅன்னாபிஷேகம் நடந்தது. கல்களம் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் சொக்கநாதருக்கு பூஜைகள் முடிந்து அன்னாஷேகம் நடந்தது.