கல்லறை திருநாளில் கிருஸ்துவர்கள் அஞ்சலி
ADDED :1802 days ago
புதுச்சேரி: புதுச்சேரியில் கல்லறை திருநாளை முன்னிட்டு கிருஸ்துவர்கள் தங்கள் முன்னோர் கல்லறையை வணங்கி மரியாதை செய்தனர்.
புதுச்சேரியில் கல்லறை திருநாளை முன்னிட்டு கிறித்துவர்கள் தங்கள் முன்னோர்களின் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினர். கல்லறை திருவிழாவையொட்டி, தங்களின் முன்னோர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து, மலர்களால் அலங்கரித்து, வழிபாடு செய்தனர். பின், கிறித்துவ தேவாலய பங்குத் தந்தைகள் மூலம் பிரார்த்தனை செய்தனர். நினைவிடங்கள் முன், மெழுகுவர்த்தி ஏற்றி, சிறப்பு வழிபாடு செய்தனர்.