மகாகணபதி கோவிலில் பாலமுருகனுக்கு சிறப்பு அலங்காரம்
ADDED :1910 days ago
மேட்டுப்பாளையம் : ஐப்பசி மாத தேய்பிறை ஷஷ்டி முன்னிட்டு, மேட்டுப்பாளையம் சிவன் புரம் ஆசிரியர் காலனியில் உள்ள ராஜா அஷ்ட விமோசன மகாகணபதி கோவிலில் பாலமுருகனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முருகன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நடந்த வழிபாட்டில் பக்தர்கள், கோயில் ஊழியர்கள் சமூக இடைவெளி விட்டு பூஜையில் கலந்து கொண்டனர்.