திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் சஷ்டி திருவிழா
ADDED :1877 days ago
திருநகர் : திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் சஷ்டி திருவிழாவை முன்னிட்டு மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், உற்ஸவருக்கு சத்ரு சம்ஹார த்ரிசதி அர்ச்சனை நடந்தது. விழா நாட்களில் தினமும் மாலையில் அபிஷேகம், பூஜை முடிந்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலிக்கிறார். பக்தர்களுக்கு அனுமதியில்லை. மாலை 6:00 மணிக்குமேல் அர்ச்சனைக்கு மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.பாண்டியன்நகர் கல்யாண விநாயகர் கோயிலில் வள்ளி, தெய்வானை சமேத கல்யாண முருகனுக்கு தினமும் காலை 9:45 மணிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.