உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தானந்தா கோவிலில் 108 சங்காபிஷேகம்

சித்தானந்தா கோவிலில் 108 சங்காபிஷேகம்

புதுச்சேரி: சித்தானந்த சுவாமி கோவிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது. கருவடிக்குப்பம், குரு சித்தானந்த சுவாமி கோவிலில், கார்த்திகை மாதம் 4 வது சோமவாரத்தை முன்னிட்டு, குரு சித்தானந்த சுவாமிக்கு 108 சங்காபிஷேகம் நேற்று நடந்தது. இதனையொட்டி, காலை 6:00 மணிக்கு சங்கு பிரதிஷ்டை, 8:00 மணியில் இருந்து 9:00 மணி வரைக்கு சிறப்பு அபிஷேகம், 9:00 மணியில் இருந்து 11:00 மணி வரை சங்காபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக தேவ சேனாதிபதி குருக்கள், சேது குருக்கள் மற்றும் சிறப்பு அதிகாரி கிருஷ்ண மூர்த்தி, மணிகண்டன் ஆகியொர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !